sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்

/

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்


ADDED : மே 19, 2025 11:45 PM

Google News

ADDED : மே 19, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ராமலிங்கம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மன் சக்தி கலச அலங்காரம் மற்றும் பண்டாரி சட்டியோடு நகர்வலம் வருதல், சக்தி அழைத்தல் நடந்தது.

பின், சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பக்தர்கள் வேண்டுதலின் பேரில், தண்டகப்பதிகம் பாடி மார்பில் வாள் தாங்கி சக்தியை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் தங்களின் உடலில் கத்தி போட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனையும், மாலை ஜோதி மாவு கூட்டுதல், மண்டலாபிஷேகம் துவக்கம், இரவு அம்மன் ஜோதி கலசம், வீதியுலா மற்றும் திருஅமுது படைத்தல், தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us