ADDED : செப் 09, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வானுார் அருகே ஜார்கண்ட் மாநில சிறுமி உடல் நலம் பாதித்து இறந்தார்.
ஜார்கண்ட் மாநிலம், ஷஷ்காமா போரியோ சாகேப் கன்சூ பகுதியை சேர்ந்தவர் நோகாரி சோரேம் மகள் மகி சோரேம், 17; இவர், கடந்த ஒரு மாதமாக விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே ஆகாசம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் லுக்கிராம் முர்மு வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், மகி சோரோமிற்கு நேற்று முன்தினம் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால், புதுச்சேரி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

