/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உலக சுற்றுச்சூழல் தின விழால் கலெக்டர் தகவல்
/
மாவட்டத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உலக சுற்றுச்சூழல் தின விழால் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உலக சுற்றுச்சூழல் தின விழால் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உலக சுற்றுச்சூழல் தின விழால் கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 06, 2025 07:04 AM

விழுப்புரம்; உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் பசுமை மரக்கன்று நடும் விழா விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர், மரக்கன்று நட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில், மரக்கன்று நடப்பட்டது.
பின், துாய்மை இயக்கம் சார்பில் துாய்மை பயண அமைப்பாளர்கள் மூலம் பயன்பாடற்ற மின்னனு கழிவு பொருட்கள், உலோகம் மற்றும் மரப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில், பயன்பாடற்ற பொருட்கள் சேகரிக்கும் பணிகள் நடப்பதை, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார்.
பின், வழுதரெட்டி ஜெகன்நாதன் போலீஸ் நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த பகுதியில் உள்ள துாய்மை காவலர்களிடம், அவர்களின் குடும்ப விபரம், பிள்ளைகள் கல்வி குறித்து கேட்டறிந்த கலெக்டர், பணி பாதுகாப்பிற்காக கையுறை, முகக்கவசம், காலணி ஆகியவை வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின் கலெக்டர் கூறியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகளும், மாவட்டம் முழுவதும் 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இதில், கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) பத்மஜா, கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) பிரேமலதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி ஆணை யர் வசந்தி, பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலர் பவித்ரா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.