ADDED : ஜன 17, 2024 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரியின் ஆசிரியர்கள், மாணவிகள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இ.எஸ்., கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணை செயலர் நிஷா ஆகியோர் பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் அகிலா வரவேற்றார். மாணவியர் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து, ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியர் புல முதன்மையர் பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

