sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி., அறிவுரை

/

நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி., அறிவுரை

நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி., அறிவுரை

நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி., அறிவுரை


ADDED : ஜூன் 12, 2025 06:37 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள எஸ்.பி., சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தமிழகத்தின் முக்கிய வழித்தடமாக விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகள் அதிகம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் விழுப்புரம் புறவழிச் சாலையில் 75 வயது முதியவர் இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொண்ட போது கார் மோதி விபத்துக்குள்ளாகி அவரும், காரில் வந்த ஒருவரும் இறந்துவிட்டனர்.

வாகன விபத்துக்களில் வயதானோர்களுக்கு காயம் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டுவர மிகவும் சிரமம் ஏற்படும்.

வயதானவர்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது இடதுபுற ஓரமாக உள்ள இருசக்கர வாகன வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கிராமப்புற சாலைகளில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், முதியவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் சாலையை கடக்கும்போது சாலையின் இருபுறமும் கவனித்து வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் சாலையை கடக்க வேண்டும்.

இரவு நேரங்களில் வயதானவர்கள் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதி பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us