/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பு
/
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பு
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பு
தேசிய மல்லர் கம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : டிச 01, 2025 05:16 AM

விழுப்புரம்: தேசிய மல்லர் கம்பம் போட்டியில் வென்று ரயிலில் வந்த விழுப்புரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் 69வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயோன மல்லர் கம்பம் போட்டி நடந்தது.
கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த போட்டியில், பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், தமிழக அணி யில், விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சிந்தாணி அரசு பள்ளிகளில் இருந்து 22 பேர் பங்கேற்றனர்.
இவர்கள், 14 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண்கள், 17 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர்.
இதில், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி சார்பில் மாணவிகள் முத்தரசி, மதுமிதா, சஞ்சனா, ரீனா ஆகியோர் தங்கம் வென்றனர்.
14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பிந்துஸ்ரீ, பூமிகா, மதுவதனி, ஹரிஹாசினி, பிரனீத்குமார், அகிலன், எழிலிசை பொழிலன், தீபேஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மணிதர்ஷன், தரணிதரன், நந்தகுமார், சோனித் வெண்கலமும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பிரியதர்ஷன், அமிர்தீஸ்வரர், மிதுன், பகத்சிங் ஆகியோர் வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.
மேலும், பெண்கள் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தமிழக அணி சார்பில் விழுப்புரம் மாணவி பூமிகா தங்கமும், அமிர்தீஸ்வரர், தரணிதரன், தனுஷா, சஞ்சனா ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனை புரிந்தனர்.
இவர்கள், நேற்று காலை 10:20 மணிக்கு சென்னை - திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் விழுப்புரம் 1வது பிளாட்பாரம் வந்திறங்கினர்.
இவர்களுக்கு மல்லர் கம்பம் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வரவேற்பு அளித்தனர்.

