sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ம.க.,விற்கு இனி அன்புமணி ஒருவர்தான்; ஆலோசனைக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாகி 'ஐயா'

/

பா.ம.க.,விற்கு இனி அன்புமணி ஒருவர்தான்; ஆலோசனைக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாகி 'ஐயா'

பா.ம.க.,விற்கு இனி அன்புமணி ஒருவர்தான்; ஆலோசனைக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாகி 'ஐயா'

பா.ம.க.,விற்கு இனி அன்புமணி ஒருவர்தான்; ஆலோசனைக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாகி 'ஐயா'


ADDED : செப் 16, 2025 03:11 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா .ம.க.,வில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்து, இரு பிரிவாக பிரிந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அன்புமணியின் செயல் தலைவர் பதவியை நீக்கியது மட்டுமல்லாமல், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நாளை 17ம் தேதி, வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது உயர்நீத்த 21 தியாகிகளின் தினத்தை திண்டிவனத்திலுள்ள வன்னியர் சங்க மாநில தலைமை அலுவலகத்தில் அனுஷ்டிப்பதற்கு இரு தரப்பினரும் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், போலீசார், வருவாய்த்துறை இணைந்து, யாரும் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

சங்க அலுவலகத்தில் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில், அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பங்கேற்ற நிர்வாகிகள் பலர் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு முன்கூட்டியே பூட்டு போட்ட ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தனர்.

திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் சண்முகம் பேசுகையில், 'இனி ஐயா என்றால் ஒருவர் மட்டுமே. அன்புமணி மட்டும் தான் நமக்கு ஐயா வேறும் யாரும் நமக்கு ஐயா கிடையாது' என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us