sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணி இழுபறி! விழுப்புரம் நகராட்சி பொதுமக்கள் கடும் பாதிப்பு

/

18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணி இழுபறி! விழுப்புரம் நகராட்சி பொதுமக்கள் கடும் பாதிப்பு

18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணி இழுபறி! விழுப்புரம் நகராட்சி பொதுமக்கள் கடும் பாதிப்பு

18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணி இழுபறி! விழுப்புரம் நகராட்சி பொதுமக்கள் கடும் பாதிப்பு


ADDED : செப் 05, 2025 07:51 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் 18 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை.இதனால் சாலை வசதி, வாய்க்கால் வசதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கியது. நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165.68 கி.மீ., நீளத்திற்கு ரூ. 263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம், 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதியதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது.

விழுப்புரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் திணறி வருகின்றனர்.

மேலும், மழைக் காலம் துவங்கிவிட்டால், பாதாள சாக்கடை பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையடையாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான தார்சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள குழந்தைவேல் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சமீபத்தில்தான் துவக்கப்பட்டது.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத நிலை நீடிக்கிறது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் ரெட்டியார்மில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை தேங்கிய கழிவுநீரை, மின் மோட்டார் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.

இப்பிரச்னையில், நகர் மன்ற சேர்மன், தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோர் தனி கவனம் செலுத்தியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனை மேற்பார்வையிட வேண்டிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பெயரளவில் பணிகளை கண்காணிப்பதாக கவுன்சிலர்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.

நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் இழுபறியாக உள்ளதால், ெபாதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இவர்களது புகாரின் பேரில், அப்பகுதி கவுன்சிலர்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றா லும், பிரச்னை சரி செய்யப் படுவதில்லை.

நகராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். திட்டப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் கூறிவிட்டதாக கூறி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, 18 ஆண்டுகளாகியும் முழுமைடையவில்லை.

இப்பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கலந்தாய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us