sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு

/

ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு

ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு

ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு


ADDED : செப் 12, 2025 07:55 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; பட்டா கேட்டு மனு அளித்த பெண்ணுக்கு மொபைல் போனில் பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் வசிக்கும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, கடந்த ஜூலை 28ம் தேதி திண்டிவனம் சப் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனு ஆர்.ஐ.,யிடம் விசாரணைக்கு வந்தது. ஆனால் மனு மீது விசாரணை நடத்தி முடிவு செய்யாமல் ஒரு மாதமாக அவர் அலை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த பெண் ஆர்.ஐ., அலுவலகம் சென்றபோது, அவர் இல்லாததால், மொபைல் போனில் பேசியுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்து பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அப்பெண், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், ஆர்.ஐ., மீது புகார் தெரிவித்து, 'விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்' என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us