ADDED : மே 19, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : புதுச்சேரி, பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் பிரகாஷ், 30; இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
பிரகாஷ் சிறுவயது முதல் வளவனுார் அருகே எல்.ஆர்., பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இங்குள்ள ஏரிக்கு மாடுகளை ஓட்டி சென்ற போது, ஏரியில் குளிக்க இறங்கினார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.