sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெருவில் வீட்டுக்கொரு மரம் பசுமை சூழலை தக்க வைத்த அழகு முன்னோரின் செயலால் கைமேல் பலன் 

/

தெருவில் வீட்டுக்கொரு மரம் பசுமை சூழலை தக்க வைத்த அழகு முன்னோரின் செயலால் கைமேல் பலன் 

தெருவில் வீட்டுக்கொரு மரம் பசுமை சூழலை தக்க வைத்த அழகு முன்னோரின் செயலால் கைமேல் பலன் 

தெருவில் வீட்டுக்கொரு மரம் பசுமை சூழலை தக்க வைத்த அழகு முன்னோரின் செயலால் கைமேல் பலன் 


ADDED : ஜூலை 22, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுமை தான் மனிதனின் உயிராற்றலை மேம்படுத்துகிறது. எத்தகைய இறுக்கமான சூழலில் வாழ்ந்த மனிதனும் பசுமை போர்த்திய மரங்களுக்கு நடுவில் வந்து விட்டால், அதன் அரவணைப்பில் சிறிது நேரம் இருந்து விட்டால் இதயம் தளர்ந்து லேசாகி பிரச்னைகள், இறுக்கங்கள் மாயமாகி விடுகின்றன.

அந்த அளவுக்கு மரங்கள் என்பவை மனிதனுக்கு கிடைத்த மாபெரும் வரம். வளர்தலும், வெட்டுப்பட்டால் துளிர்விடுவதும், இயல்பிலே நிழல், கனி தருவதையும் தன்னிச்சையாக செய்வதால் பூமி பரப்பில் இன்றியமையாத ஒரு உயிராக மரங்கள் உள்ளன.

இயற்கை மீது எப்போதும் மனிதனுக்கு ஆர்வம் உண்டு. இயல்பாகவே மனிதனுக்கு மரங்களோடு இருக்க தான் ஆசை. ஆனால் கால சூழலியலும், பண தேவைகளும் அவனை மரத்திடம் இருந்து துாரம் வைத்துள்ளது. கிராமப்புற வயல்வெளிகளிடம் இருந்து விலகி நகர வாகன நெரிசலில் திக்குமுக்காட வைத்துள்ளது. நாளுக்கு நாள் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்தல், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திணறும் நிலை உள்ளது.

ஆனால் மரங்கள் சூழலை பசுமையாக வைத்திருப்பதுடன் பல்வேறு வகைகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆணிவேராக இருக்கிறது. மரம் வளர்ப்பை அமைப்பாகவும், மக்களின் கூட்டு இயக்கமாகவும் செய்து வருகின்றனர் பலர்.

அந்த வகையில் விருதுநகர் கஸ்துாரி பாய் ரோடு, திருவள்ளுவர் ரோடு மக்கள் தங்கள் தெருக்களில் வீட்டுக்கொரு மரம் வளர்த்து பசுமை சூழலை பேணுகின்றனர். 1980 முதல் இங்கு குடியேறி பல்வேறு தரப்பட்ட மக்கள் மரக்கன்றுகளை நட்டனர். அவை தற்போது பெரிய மரமாகி அப்பகுதிக்கே நிழல் தரும் ஒன்றாக மாறி உள்ளன. இந்த சூழலை அவ்வழியாக செல்லும் மக்களும் அனுபவிக்கின்றனர். நகரிலே பல அமைப்புகள் மரக்கன்றுகள் நட்டு வருகின்றன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி முன்னோர் செய்த செயல் கைமேல் பலனை தந்து வருகிறது. இப்பகுதியினருக்கும் இன்னும் மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ளதாகவும், மரங்கள் தந்தால் நட்டு பராமரிப்போம் என்கின்றனர்.

1981ல் இங்கு குடியேறிய போது என் பெற்றோர் மரம் நட்டனர். அவர்களை போலவே அருகில் வசித்தோரும் மரங்கள் நட தெருவே தற்போது பசுமையை மாறி உள்ளது. அரசு சார்பில் இன்னும் மரங்கள், வீட்டு செடிகள் தந்தால் வளர்த்து பராமரிக்க தயாராக உள்ளோம். காற்றில் அதிகரித்து வரும் கார்பனை கட்டுப்படுத்த மரங்கள் பெரிதும் உதவுகிறது. இதனால் எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு பெற்றோர் வயதினர் செய்தது போல் நாமும் மரம் நட்டு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க வேண்டும்.

- தனசேகர், தொழிலதிபர், விருதுநகர்.

எதிர்காலத்தை காக்க மரங்கள் அவசியம்



மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போல முக்கிய தேவைகள் என்பது போல இருப்பிடத்திற்கு அருகே மரம் ஒன்று இருப்பதும் அத்தியாவசிய தேவை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்றில் மாசு அதிகரித்துள்ளது. ஆங்காங்கே குப்பை எரிப்பதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு தருபவை மரங்கள் மட்டுமே. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்க எதிர்காலம் பசுமை நிறைந்ததாக மாறும்.

- மகிஷா, தொழில் முனைவோர், விருதுநகர்.

மரங்கள் அத்தியாவசியம்








      Dinamalar
      Follow us