/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எதிர்கோட்டையில் காயல்குடி ஆறு தடுப்பணை சேதம்; தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
/
எதிர்கோட்டையில் காயல்குடி ஆறு தடுப்பணை சேதம்; தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
எதிர்கோட்டையில் காயல்குடி ஆறு தடுப்பணை சேதம்; தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
எதிர்கோட்டையில் காயல்குடி ஆறு தடுப்பணை சேதம்; தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2024 05:42 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் காயல்குடி ஆறு தடுப்பணை சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் வெளியேறி, குடிநீர் ஆதாரத்திற்கு, விவசாயத்திற்கும் வேட்டு வைக்கிறது. மேலும் ஆறு முழுவதும் சீமை கருவேல மரங்கள் நிறைந்திருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ராஜபாளையம், மாதாங் கோவில்பட்டி புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர் கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் கலக்கிறது. எதிர் கோட்டையில் 400 ஏக்கரில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது.
விவசாயத்திற்காகவும், குடிநீர் ஆதாரத்திற்காகவும் காயல் குடி ஆற்றின் குறுக்கே எதிர்கோட்டையில் 1994 ல் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, இப்பகுதிக்கு விவசாயத்திற்கு தங்கு தடை இன்றி தண்ணீர் கிடைத்தது.
மேலும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கோட்டையில் உள்ள தடுப்பணை சேதமடைந்தது.
இதனால் காயல்குடி ஆற்றில் தண்ணீர் வந்தும் தேக்கி வைக்க முடியாமல் வெளியேறியது. தற்போது விவசாயத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை
மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர ஆறு முழுவதுமே சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே விவசாயம், குடிநீர் ஆதாரம் கருதி தடுப்பணையை சீரமைக்க வேண்டும். ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.