sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

/

சாத்துாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

சாத்துாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

சாத்துாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்


ADDED : ஜூன் 10, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார், : சாத்துார் நகராட்சி பகுதியில் தெருக்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தென் வடல் புது தெரு, காட்டுப்புது தெரு, கட்டில் கட்டும் தெரு, நந்தவனப்பட்டி தெரு, வெள்ளக்கரைரோடு, ஆகிய பகுதிகளில் தெருக்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளக்கரை ரோடு பகுதியில் ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.

சாக்கடை வாறுகாலை ஆக்கிரமிப்பு செய்து இந்தப் பகுதியில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 30 அடி 40 அடி அகலத்தில் இருந்த பாதைகள் சுருங்கி தற்போது 15 அடி 20 அடி பாதையாக மாறிவிட்டது. நகராட்சியின் முக்கிய பகுதியான இந்த பகுதியில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர்.

லாரிகள் சென்று வந்த தெருக்களில் தற்போது ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலையில் பாதை மிகவும் குறுகிவிட்டது. மேலும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக ஆம்புலன்ஸ் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் கூட தெருவுக்குள் வர முடியாத நிலை உள்ளது.

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாது நகராட்சி தெருக்களை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களையும் கடைகளையும் அகற்றி நெரிசலற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும்.






      Dinamalar
      Follow us