sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 14, 2025 03:39 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ 14.03 கோடிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப்பணி மையங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் நிலுவையில் உள்ள 7,294 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 , 610 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரத்து 339க்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மலர்க்கொடி, காளி தேவி, அம்மாசிகனி, மாலதி ஆகியோருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 19 லட்சம் சமரச முறையில் பேசி முடிக்கப்பட்டு அதற்கான நகலினை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் வழங்கினார்.






      Dinamalar
      Follow us