/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கணக்கே துவங்காத வங்கிக்கு பணம் அனுப்பியதாக மெசேஜ்
/
கணக்கே துவங்காத வங்கிக்கு பணம் அனுப்பியதாக மெசேஜ்
ADDED : ஜன 17, 2024 12:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜக்கம்மாள் என்பவரின் அலைபேசிக்கு வங்கி கணக்கே இல்லாத இந்தியின் வங்கியில் மகளிர் உரிமை செலுத்தப்பட்டதாக மெசேஜ் வரும் நிலையில் உரிமை தொகை கிடைக்காமல் தவித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி ஜக்கம்மாள், 34. இவர் தமிழக அரசின் மகளிர் உரிமை திட்ட பயனாளியாக தேர்வு செய்துள்ளதாக வருவாய்துறையினர் மூலம் அலைபேசியில் மெசேஜ் வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கியில் கணக்கு உள்ளது.
இந்நிலையில் அவருக்கு ஐந்து மாதமாக இந்தியன் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக மெசேஜ் வருகிறது. ஆனால், இந்தியன் வங்கியில் அவருக்கு கணக்கே இல்லை, இதனால் மெசேஜ் வந்தும் பணத்தை பெறமுடியாமல் தவித்து வருகிறார்.
எனவே, இத்தகைய குளறுபடிகளை சரி செய்து மாவட்ட நிர்வாகம் தனக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.

