sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

/

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு


ADDED : ஜூன் 29, 2024 04:40 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், :

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்



மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வை உளவியல் ரீதியாக ஏற்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

அவர் பேசியதாவது:

பள்ளி மாணவர்கள் எது சரி, எது தவறு என்று ஆராயும் பகுத்தறிவு வயதுக்கு வரும் முன்பே பல்வேறு சூழல்களை சந்திக்கின்றனர். நண்பர்கள் குழுவில் பெரும்பாலானோர் செய்யும் தவறை செய்ய மறுக்கும் நண்பர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகிறது என்ற உளவியல் சார்ந்த சிக்கல்களை மாணவர்கள் சந்திக்கின்றனர்.

உன்னை பிடிக்காமல் போவதை எதிர் கொள்வதற்கான தைரியத்தை நீ வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதுகுறித்து தொடர்ச்சியாக எடுத்துக்கூறி நல்வழி படுத்த வேண்டும். ஓய்வு நேரங்களில் விளையாட்டு, மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகள் உள்ளிட்ட மகிழ்ச்சியை தரக்கூடிய பல்வேறு காரணிகள் குறித்து அறிமுகம் செய்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும், என்றார்.

அரசு, உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 225 உடற்கல்வி ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்








      Dinamalar
      Follow us