sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வயல்களுக்கு உயிர்ம சான்று பெற அழைப்பு

/

வயல்களுக்கு உயிர்ம சான்று பெற அழைப்பு

வயல்களுக்கு உயிர்ம சான்று பெற அழைப்பு

வயல்களுக்கு உயிர்ம சான்று பெற அழைப்பு


ADDED : ஜூன் 26, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விதைச்சான்று, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் கோகிலா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் குதிரை வாலி, சாமை, வரகு, திணை ஆகிய சிறுதானியங்கள், நெல் ரகங்கள், வாழை, மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பழ மரங்களை விவசாயிகள் பெரும்பாலும் உயிர்ம சான்றிதழ் பெறாமல் விவசாயம் செய்கின்றனர்.

இச்சான்றிதழ் பெற்றால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்க மானியங்கள், சலுகைகளை பெற முடியும். இந்த விளை பொருட்களுக்கு உள், வெளிநாட்டில் நல்ல விலை கிடைக்கிறது.

தமிழகத்தில் உயிர்மச்சான்றளிப்புத் துறையால் தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் புதியதாக உயிர்மச்சான்று பெற பதிவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

விவரங்களுக்கு விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us