sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் தொடர் மழை பட்டாசு உற்பத்தி பாதிப்பு

/

சிவகாசியில் தொடர் மழை பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசியில் தொடர் மழை பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசியில் தொடர் மழை பட்டாசு உற்பத்தி பாதிப்பு


ADDED : ஜன 10, 2024 01:11 AM

Google News

ADDED : ஜன 10, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் பெய்த தொடர் மழையால் ஒரு மாதத்திற்கும் மேலாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் ,வெம்பக்கோட்டை, விருதுநகரில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் மூன்று லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 2023 நவ. 12 ல் தீபாவளி முடிந்த நிலையில் அடுத்த சில தினங்களில் பட்டாசு உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது பருவமழை துவங்கியதால் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது. அவ்வப்போது ஆலைகள் திறக்கப்பட்டாலும் அடுத்தடுத்து தொடர் மழை பெய்ததால் உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறவில்லை.

சமீபத்தில் சிவகாசி சுற்றுப்பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பட்டாசு உற்பத்தி ஒரு மாதமாக முழுமையாக பாதிப்பில் உள்ளது. சற்று ஈரப்பதம் இருந்தாலும் உற்பத்தி செய்ய வழியில்லை. மழை தொடரும் பட்சத்தில் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இன்றி சிரமப்படுகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி அக். ல் 31 வருகிறது. இந்த மாதம் பொங்கல் என அடுத்தடுத்து விடுமுறை இருப்பதால் எஞ்சிய 9 மாதம் மட்டுமே உள்ளது. இதனால் வரும் தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளதால் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us