sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம்

/

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம்

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம்

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம்


ADDED : ஜன 17, 2024 12:51 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பு அறை கிடையாது. வெயில், மழைக்கு ஒதுங்க இடமில்லை. கழிப்பிடங்கள் சரிவர தூய்மைப் படுத்தாததால் துர்நாற்றம் ஏற்பட்டு, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், பெரும்பாலானோருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. குடிநீர் வசதி கிடையாது. வெயில் காலத்தில் பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் நேரம் பார்க்க கால அட்டவணை இல்லை. எந்த நேரத்தில் எந்த பஸ்கள் எங்கு செல்லும் என்கிற விவரங்கள் தெரியாமல் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வெயில், மழைக்கு கடை ஓரங்களில் ஒதுங்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் சத்தம் போடுகின்றனர். இதனால் பயணிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது.

இதனை சரி செய்ய வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள் போதிய நிதியில்லாததால் கண்டுகொள்ளவில்லை. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் உள்ளது. வாடகை வசூல் செய்கின்றனர். இதன் மூலம் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us