sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வனத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதில்  தாமதம் விவசாயிகள் அதிருப்தி

/

வனத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதில்  தாமதம் விவசாயிகள் அதிருப்தி

வனத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதில்  தாமதம் விவசாயிகள் அதிருப்தி

வனத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதில்  தாமதம் விவசாயிகள் அதிருப்தி


ADDED : செப் 13, 2025 03:34 AM

Google News

ADDED : செப் 13, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழகத்தில் வனத்துறையில் ஊழியர் பற்றாக்குறையால் காட்டுப்பன்றியை சுடுவது சாத்தியமாகாது, என அரசாணை அறிவித்த போதே விவசாயிகள் எச்சரித்த நிலையில், அறிவிப்பு வந்து 9 மாதங்கள் ஆகியும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என புலம்புகின்றனர்.

தமிழகத்தில் காட்டுப்பன்றி தொல்லை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

2024 வடகிழக்கு பருவமழை காலத்தின் போதும் தொடர் சேதத்தால் காட்டுப்பன்றியை சுட்டு பிடிக்க மக்கள் பிரதிநிதி களிடம் கோரினர்.

இந்நிலையில் 2025 ஜன., சட்டசபை கூட்டத்தில், காட்டுப்பன்றிகள்காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம்என அரசு அறிவித்தது. ஆனால் வனத்துறையின் ஆள் பற்றாக்குறையால் இது சாத்தியமாகாது என விவசாயிகள் அப்போதே அதிருப்தி தெரிவித்தனர்.

இவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி, விவசாயிகளே சுட்டுப்பிடிக்க அனுமதி கோரிவிருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் வனப் பரப்பை தாண்டி கண்மாய் களின் கருவேல மரங்களில் தான் காட்டுப்பன்றிகள் அதிகளவில் வசிக்கின்றன. வன பரப்பை விட்டு வெளியே தான் காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளன.

வேட்டை தடுப்பு காவலர்கள், வனச்சரகர்கள் பற்றாக்குறை வனத்துறையில் நிலவுகிறது. இதில் அரசாணையின்படி காட்டுப் பன்றியை சுடுவது சாதாரண காரியமல்ல.

மேலும் இரவு நேரங்களில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சூறையாடுகின்றன.

எனவே ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணாமல் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை என்கின்றனர் விவசாயிகள்.






      Dinamalar
      Follow us