sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொடர்ந்து 2வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

/

தொடர்ந்து 2வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

தொடர்ந்து 2வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

தொடர்ந்து 2வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு


ADDED : ஜூன் 11, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:''தொடர்ந்து இரண்டாவது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியை கண்டு தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தி.மு.க., நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர்.

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்.

அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் இருந்தால் அவர் அங்கு இருக்க மாட்டார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி என்று எங்கே சொன்னார்கள். யார் சொன்னார்.

தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி வரும். ஆன்மிகத்தின் அடையாளமான கட்சியே அ.தி.மு.க., தான். தி.மு.க., சமூக நீதிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடுவதாக பொய் சொல்லி வேஷம் போட்டு வருகிறது.

தி.மு.க., வந்த உடனே என் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ., டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்த வழக்குகளை பார்த்து பயந்து ஓடவில்லை. நான் யாரையும் ஏமாற்றியதாக வரலாறு கிடையாது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us