ADDED : ஜன 26, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:30 மணி முதில் மதியம் 12 00 மணி வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

