sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு

/

அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு

அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு

அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்த உத்தரவு


ADDED : செப் 04, 2025 03:56 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகாசி சாட்சியாபுரத்தில் சொந்த கட்டடத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டடத்தில் கல்லுாரி மாணவர் விடுதி செயல்படுவதால், மாணவர் விடுதி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் போதிய மாணவர்கள் இல்லை என்ற புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரவில் மாணவர்கள் தங்குவதில்லை என்பது உறுதியானதை அடுத்து சிவகாசி பள்ளி மாணவர் விடுதி உட்பட மாவட்டத்தில் 35 ஆதிதிராவிடர் நல விடுதிகளை மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதில் 4 பள்ளி விடுதிகள் கல்லுாரி விடுதிகளாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறை ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிவகாசி பள்ளி மாணவர் விடுதியை தற்காலிகமாக கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

50 மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, நிரந்தர கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்தப்படும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us