sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

'அன்புமணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்'

/

'அன்புமணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்'

'அன்புமணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்'

'அன்புமணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்'


ADDED : செப் 16, 2025 12:17 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; ''தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி தலைமையில் பா.ம.க., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும்,'' என, சிவகாசியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கூறினார்.

அவர் கூறியதாவது: பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு 2026 ஆக., வரை தலைவராக செயல்பட பொதுக்குழு அனுமதி வழங்கியதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ம.க., என்பது ஒன்று தான். அது அன்புமணி தலைமையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி தலைமையில் சட்டசபை தேர்தலை கட்சி எதிர்கொள்ளும்.

கட்சியை பிளவுபடுத்த வேண்டும், அன்புமணி தலைவராக செயல்படக் கூடாது என நினைப்பவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்ற அன்புமணி முயற்சி எடுத்து வருகிறார். கட்சி நிறுவனர் ராமதாஸ் தான் என்றாலும் கட்சி தனிநபரின் முடிவின்படி செயல்பட முடியாது. அன்புமணி தலைமையிலான பொதுக்குழு கூட்டணியை இறுதி செய்யும் என்றார்.






      Dinamalar
      Follow us