/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலைவாழ் மக்கள் வாழ்க்கை தர மேம்பாட்டு கருத்தரங்கம்
/
மலைவாழ் மக்கள் வாழ்க்கை தர மேம்பாட்டு கருத்தரங்கம்
மலைவாழ் மக்கள் வாழ்க்கை தர மேம்பாட்டு கருத்தரங்கம்
மலைவாழ் மக்கள் வாழ்க்கை தர மேம்பாட்டு கருத்தரங்கம்
ADDED : ஜன 26, 2024 04:58 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,, ராம்கோ குரூப், சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டு கருத்தரங்கம், இலவச சட்ட ஆலோசனை உதவி முகாம் தாணிப்பாறை ராம் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி இருதய ராணி, மலைவாழ் மக்களின் கோரிக்கைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். சட்ட ஆலோசனை உதவிகள் குறித்து பேசினார்.
ராம்கோ துணைத் தலைவர் குருசாமி, பழங்குடியினர் சேவை பிரிவு அலுவலர் முருகேசன், அய்யனார் கோயில், அத்தி கோயில், ஜெயந்த் நகர், ராம் நகர் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

