sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

/

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்


ADDED : மே 27, 2025 12:33 AM

Google News

ADDED : மே 27, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தேவதானம் பகுதியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே சேத்துார் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், சேர்வராயன் குளம் உள்ளிட்ட கண்மாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

15 நாட்களுக்கு முன் தொடங்கி இப்பகுதியில் அறுவடை பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் நேற்று தேவதானம், கோவிலுார், சேத்துார், முகவூர் ஆகிய நான்கு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையத்தை மண்டல அலுவலர் பால்பாண்டி திறந்து வைத்தார். இதில் சன்னரக நெல் கிலோ ரூ.24.50ம் மோட்டா ரகத்திற்கு ரூ. 23.05 வழங்கப்படுகிறது. இதனால் தனியார் வியாபாரிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விற்கும் நிர்பந்தம் தவிர்க்கப்பட்டது.

அத்துடன் நெல்லுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதால் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us