/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
/
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
ADDED : ஜூன் 30, 2025 12:23 PM
சிவகாசி: ''பா.ம.க., வில் நிலவும் உட் கட்சி பிரச்னைகள் சரி செய்யப்பட்டு 2026 சட்டசபை தேர்தலை கட்சி ஒரே அணியாக எதிர்கொள்ளும்'' என ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிவகாசியில் பா.ம.க., சார்பில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், தென் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் பங்கேற்றனர்.
முரளி சங்கர் பேசியதாவது: முன்னாள் பொருளாளர் திலகபாமா மூத்த நிர்வாகிகளை தரக்குறைவாக நடத்தியதால் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தவர்கள் தற்போது மீண்டும் கட்சிப் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
ராமதாசை விட்டு விலகியது போல், திலகபாமா அன்புமணியை விட்டு விலகுவது தான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது, என்றார்.
கூட்டத்திற்கு பின் பொருளாளர், பொதுச்செயலர் அளித்த பேட்டி: நிறுவனர் ராமதாசிடம் தான் அனைத்து அதிகாரமும் இருப்பதால் அவரது நியமனம் மட்டும் தான் செல்லும்.
பழங்குடியினத்தை சேர்ந்தவரை பொதுச் செயலாளராக நியமித்து உள்ளதை இலந்தை பழம் விற்பவர்களுக்கு பதவி என அன்புமணி கூறுவது தவறு. ராமதாஸ் மிகவும் நிதானமாக தெளிவாக முடிவுகளை எடுக்கிறார். வெற்றிக் கூட்டணியை அமைப்பார்.
விரைவில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதற்கு முன் உட்கட்சி பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும். 2026 சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும் என்றனர்.
பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்.
ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.