/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி, திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணி பிப்.26ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
/
சிவகாசி, திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணி பிப்.26ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
சிவகாசி, திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணி பிப்.26ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
சிவகாசி, திருத்தங்கலில் ரயில்வே மேம்பால பணி பிப்.26ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
ADDED : பிப் 24, 2024 05:42 AM
சிவகாசி, : விருதுநகர் மாவட்டம்சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்பணிக்கு பிப்.26ல் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
மதுரை - -செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவகாசி வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ்,மதுரை _- குருவாயூர், செங்கோட்டை- மயிலாடுதுறை, சென்னை- கொல்லம், மதுரை -- செங்கோட்டை, சிலம்பு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்- - வேளாங்கண்ணி, திருநெல்வேலி - - மேட்டுப்பாளையம் ஆகிய ரயில்கள்இயக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதையில் சிவகாசி -விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங், சிவகாசி- - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் ஆகியவற்றில் மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரயில் சென்ற பின் போக்குவரத்து சீராக 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் சிவகாசி திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க 2021ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தொடங்கப்படவில்லை.
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, தெற்கு ரயில்வே சார்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது.
சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை ரூ.60 கோடி மதிப்பில் 700 மீட்டர் நீளம், 12 அகலத்தில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
ஆனால் திருத்தங்கலில்ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் விருதுநகர் - - தென்காசி இடையிலான ரயில் பாதையில் திருத்தங்கல் கிராசிங்(424), சிவகாசி சாட்சியாபுரம் கிராசிங்(427) ஆகியவற்றில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி, ரயில்வேதுறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பிப்.26ல் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ஒரே நேரத்தில் அடிக்கல்நாட்டுவது சிவகாசி மக்கள், வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.