sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி

/

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி


ADDED : செப் 23, 2025 03:51 AM

Google News

ADDED : செப் 23, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9. 40 லட்சம் மோசடி செய்த ஸ்ரீவில்லிபுத்துார் அரசு பஸ் டிரைவர் சண்முகராஜ் உட்பட மூவர் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வத்திராயிருப்பு கீழ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் 48, இவர் வத்திராயிருப்பு டிப்போவில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டிப்போவில் பஸ் டிரைவராக பணியாற்றுபவர் சண்முகராஜ். இவர் தனது மைத்துனர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசிக்கும் சின்னப்பனும், அவரது மனைவி ராஜாத்தியும் பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார்.

இதனை அவர் நம்பி, 2020ல் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தர ரூ. 9.40 லட்சம் வாங்கி 3 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் பணத்தை திரும்ப கேட்டபோது அவரை 3 பேரும் மிரட்டினர்.இதுகுறித்து வத்திராயிருப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் சண்முகராஜ், சின்னப்பன், ராஜாத்தி மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us