sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலைகளில் கழிவுகளை பாதுகாப்பாக எரிக்க வேண்டும்: கண்காணிப்பு தேவை

/

பட்டாசு ஆலைகளில் கழிவுகளை பாதுகாப்பாக எரிக்க வேண்டும்: கண்காணிப்பு தேவை

பட்டாசு ஆலைகளில் கழிவுகளை பாதுகாப்பாக எரிக்க வேண்டும்: கண்காணிப்பு தேவை

பட்டாசு ஆலைகளில் கழிவுகளை பாதுகாப்பாக எரிக்க வேண்டும்: கண்காணிப்பு தேவை


ADDED : செப் 12, 2025 04:11 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப் பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமை பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. எந்த உரிமம் பெற்று இருந்தா லும் பட்டாசு ஆலை அமைக்கும் போது அதன் வளாகத்திலேயே பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வேண்டும்.

இதனை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத் திருக்க வேண்டும். இதில்தான் பட்டாசு கழிவுகளை கொட்டி பாதுகாப்பாக எரிக்க வேண்டும். பட்டாசு ஆலையில் இந்த பாது காப்புக் குழி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படும்.

இந்நிலையில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளில் அதன் கழிவுகளை ஆலை வளாகத்தில் உள்ள குழியில் பாதுகாப்பாக கொட்டி எரிக்காமல் வெளியில் பொது இடங்களிலும், ரோட்டோரங்களில் கொட்டி விடுகின்ற னர். மேலும் கண்மாய், ஊருணி போன்ற நீர் நிலைகளிலும் கொட்டி எரித்து விடுகின்றனர். இதனால் நீரும் மாசுபடுகின்றது. இதனால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் செங்கமலப்பட்டியில் விளையாட்டு மைதானம் அருகே பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதன் அருகே அமர்ந் திருந்த வாலிபர்கள் எதிர்பாராமல் தீ வைத்த போது கழிவுகள் தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டு காய மடைந்தனர்.

இதேபோல் வச்சகாரப்பட்டியில் சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கிய நபர் இதே பட்டாசு கழிவு வெடித்து காயமடைந்தார். இதுபோல் அவ்வப்போது பொது இடங்களில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகளால் வெடி விபத்து ஏற்பட்டு பலரும் காயம் அடைகின்றனர். சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக இதில் தீயிட்டு காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

பட்டாசு ஆலையில் வளாகத்திற்குள் பாது காப்பாக கழிவுகளை எரிக்க வேண்டும் என விதிமுறை இருந்தும் ஒரு சில ஆலைகளில் இந்த விதி பின்பற்றப்படுவதில்லை. அதிக ஆட்கள் வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிப்பது உள்ளிட்ட விதி மீறல்களை அதி காரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக் கின்றனர்.

அதேபோல் பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்தும் கண் காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us