நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் :
விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
எஸ்.எப்.எஸ்., குழும பள்ளிகளின் கல்வி குழு ஆலோசகர் செபாஸ்டின் ராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆரோக்கியம், தாளாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகளின் டி.இ.ஓ., ஜான்பாக்கிசெல்வம், மல்லாங்கிணர் எஸ்.ஐ., மகேஷ் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி பொருளாளர் இமானுவேல் சதீஷ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவி அக்ஷிதா நன்றிக்கூறினார்.