ADDED : மார் 25, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி தொட்டியங்குளத்தில் தாண் பவுண்டேஷன், எஸ்.பி.ஐ., அறக்கட்டளையின் கிராம சேவா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கிளை மேலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வக்கீல் லோகேஸ்வரி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு தையல் மிஷின், தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்காக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.