ADDED : ஜன 24, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர : விருதுநகர் தாலுகா சின்ன பேராளியைச் சேர்ந்தவர் ரமேஷ்,31, இவரது மனைவி கச்சம்மாள், 29,.
இருவரிடையே குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் 2014 ஜன. 18 அன்று மனைவி கச்சம்மாளை, கணவர் ரமேஷ் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். போலீசார் ரமேஷை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

