sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிராமங்களில் டவுன் பஸ்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் ...இயக்கப்படுமா

/

கிராமங்களில் டவுன் பஸ்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் ...இயக்கப்படுமா

கிராமங்களில் டவுன் பஸ்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் ...இயக்கப்படுமா

கிராமங்களில் டவுன் பஸ்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் ...இயக்கப்படுமா


ADDED : செப் 23, 2025 03:49 AM

Google News

ADDED : செப் 23, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, சாத்துார், அருப்புக் கோட்டை, வெம்பக்கோட்டை, ஸ்ரீவி., ராஜபாளையம் ,விருதுநகர், தாலுகாக்களில் அதிக அளவு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள்,சிறு வியாபாரிகள் காலை, மாலை நேரங்களில் நகர் பகுதிக்கு வந்து விளைந்த பயிர்களையும் காய்கறிகளையும் கீரைகளையும் டவுன் பஸ்சில் கொண்டு வந்து நகர் பகுதியில் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு திரும்புகின்றனர்.

வெள்ளரிக்காய், கீரை, கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் பிடிக்கப்படும் மீன்களையும் வியாபாரிகள் டவுன் பஸ்சில் நகர் பகுதிக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் களில் லக்கேஜ் உடன் அதிகளவு விவசாயிகளும் மாணவர்களும் பயணம் செய்யும் நிலை உள்ளது.

அந்த பஸ்களின் பின்பகுதியில் இதற்காக இரண்டு இருக்கைகள் கழற்றப்பட்டு இடம் ஒதுக்கப்பட்ட போதும் அதிகமான அளவில் லக்கேஜ் பஸ்சில் இடம் பிடித்துக் கொள்வதால் பயணிகள் வேறு வழியின்றி நின்று கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. நகர் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில் கிராமங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதனால் காலை நேரத்தில் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் அலுவலர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் ஆபத்தை உணராது ஒற்றை காலை படியில் ஊன்றியும் மற்றொரு காலை தொங்க விட்டபடி வருகின்றனர்.

வேகத்தடையில் பஸ் வேகமாக ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் கூடுதலான அரசு டவுன் பஸ்களை கிராமப் பகுதிக்கு இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us