sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

/

"அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

"அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

"அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

15


UPDATED : ஜூன் 05, 2024 04:32 PM

ADDED : ஜூன் 05, 2024 03:45 PM

Google News

UPDATED : ஜூன் 05, 2024 04:32 PM ADDED : ஜூன் 05, 2024 03:45 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும், அசைக்க முடியாத சக்தி என்பதை நிருபித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசைக்க முடியாத சக்தி

தமிழகத்திலும் ஆளும் அரசின் அதிகார பலம், பண பலம், அரசியல் சூழ்ச்சியை முறியடித்து பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும், அசைக்க முடியாத சக்தி என்பதை நிருபித்துள்ளது. தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதி செய்துள்ளது.

தமிழக மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட எனக்கு பெரும் ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்பணிப்பு

நீலகிரி தொகுதியில் களப் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், என் மீது அன்பும் பாசமும் கொண்ட நல் உள்ளங்களுக்கு எனது நன்றி. நீலகிரி தொகுதியில் இருந்து நான் எம்.பி.,ஆக தேர்வாகாவிட்டாலும் அதனை எனது தொகுதியாகவே நினைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதிபட கூறுகிறேன்.

வளமான தமிழகத்திற்கும் வலிமையான பாரதத்திற்கும் தொடர்ந்து அர்பணிப்புணர்வுடன் பணியாற்றுவோம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எல்.முருகன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us