ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!
ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!
UPDATED : ஆக 04, 2024 02:10 PM
ADDED : ஆக 04, 2024 07:58 AM

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பசுக்களுக்கு தீவனம் மற்றும் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதும் வழக்கம். இன்று (ஆகஸ்ட் 4) ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் கடற்கரையில் மக்கள் குவிந்தனர்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, புஷ்ய மண்டப படித்துறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.
* மதுரை வைகை ஆற்றில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
* திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையிலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பேர் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர்.