sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

/

'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

26


ADDED : ஜூலை 24, 2024 09:17 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 09:17 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:

பிரதமர் தலைமையில் நடைபெறவிருக்கும் 'நிதி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள, போலி ஜனநாயகத் தூதுவரான தமிழக முதல்வர் .ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார்.

அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.

உண்மையில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை புறக்கணிப்பது நியாயமாகுமா? இது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us