sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

/

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்

31


UPDATED : ஜூலை 29, 2024 11:53 AM

ADDED : ஜூலை 29, 2024 11:15 AM

Google News

UPDATED : ஜூலை 29, 2024 11:53 AM ADDED : ஜூலை 29, 2024 11:15 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '18 கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது.

தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அமைச்சர் விளக்கம்

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த விளக்கத்தில், ''எந்த கிளைச் சிறையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை; கிளை சிறைகள் பழுது பார்க்கப்பட்டு அவற்றை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.








      Dinamalar
      Follow us
      Arattai