sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

/

போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

போலி பேராசிரியர்கள் சர்ச்சை: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்; முறைகேடு உறுதியானால் அங்கீகாரம் ரத்து

12


ADDED : ஜூலை 29, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:10 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பேராசிரியர்கள் போலி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை, கல்லுாரிகள் பெற வேண்டும். இதற்காக, தேவைக்கேற்ப பேராசிரியர்கள் பணியில் இருப்பது போலவும், முறையான விளம்பரங்கள் செய்தது, நியமனம் நடந்தது போலவும், தனியார் கல்லுாரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு, 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழு கூறியுள்ளது.

இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லுாரிகள் மற்றும் அந்த கல்லுாரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால், கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை

'என் பெயரில் போலியான அறிவிப்புகள் வெளிவருகின்றன; அவற்றுக்கு பதில் அளிக்காமல் புகார் அளியுங்கள்' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: நான், 'வாட்ஸாப்' செய்தி அனுப்புவது போல, சில மோசடி நபர்கள், போலியான பக்கத்திலிருந்து தகவல்களை அனுப்புகின்றனர். என் பெயர், புகைப்படம், மின்னஞ்சல் முகவரிகளை வைத்து ஏமாற்றுகின்றனர். இதுபோல, என் பெயரில் ஏதாவது தகவல்கள் வந்தால், அதற்கு பதிலளிப்பதற்கு பதில், 'ஸ்கேம், பிராட், பிளாக்' என்று, புகார் அளியுங்கள்.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளில், போலியான பேராசிரியர்கள் விபரங்கள் வெளியிட்டு ஏமாற்றுவதாகவும் தகவல் வந்துள்ளது. பல்கலையின் போர்ட்டலில், இணைப்பு கல்லுாரிகள், பேராசிரியர்கள் குறித்த விபரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.அதனால், தனியார் இணையதளங்களில் உள்ள போலி செய்திகளை கண்டறிந்து, விழிப்புணர்வுடன் இருங்கள். மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us