sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

/

கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

8


UPDATED : ஜூன் 22, 2024 02:38 PM

ADDED : ஜூன் 22, 2024 10:10 AM

Google News

UPDATED : ஜூன் 22, 2024 02:38 PM ADDED : ஜூன் 22, 2024 10:10 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 20ம் தேதி துவங்கியது. கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டையில் வந்தனர். சபை துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து பேசினார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. சபாநாயகரை கண்டித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.



அப்பாவு விளக்கம்

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன். கேள்வி நேரம் மக்களுக்கான நேரம். எதிர்க்கட்சிகளுக்கு பேச முறைப்படி அனுமதி உண்டு. எதிர்க்கட்சியினருக்கு எந்த நோக்கம் இருக்கு என்று தெரியவில்லை.

மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இதுபோல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி நேரத்திற்கு முன்பாக, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல. வருங்காலத்தில் எதிர்க்கட்சியினர் நாகரீகமாக செயல்பட வேண்டும். உங்கள் நெருக்கடியை தீர்க்கும் இடம் சட்டசபை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சி.பி.ஐ., விசாரணை அவசியம்

சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: மக்களுடைய உயிர் பிரச்னை என்ற வகையில் சட்டசபையில் பேச அனுமதி கோரினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி தர மறுத்துவிட்டார். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடைபெறவில்லை என மாவட்ட கலெக்டர் முதலில் கூறினார். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

வேற என்ன முக்கிய பிரச்னை

கள்ளக்குறிச்சியில் போலீசாருக்கு தெரிந்தே, கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. மக்கள் உயிரைப் பறித்த சண்டாளர்களை தண்டிக்க நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார். இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை அவசியம். தமிழக அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளி வராது.

கள்ளச்சாரயத்தால் நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை விட வேற என்ன முக்கிய பிரச்னை இருக்கிறது. அரசு துரிதமாக செயல்பட்டு இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புறக்கணிப்பு

இந்நிலையில், இன்றும் ( ஜூன் 22) சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us