ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் கெடுபிடி
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் கெடுபிடி
ADDED : ஜூலை 14, 2024 05:41 PM
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் ஜூலை 13ல் 400 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம்போல் இந்திய- - இலங்கை எல்லையில் மீன்பிடித்தபோது ஐந்து கப்பல்களில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றினர். அப்போது தங்கள் பகுதி எனக்கூறிய இலங்கை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மீனவர்களை எச்சரித்து விரட்டினர். உயிருக்கு பயந்த அவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்துக் கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் சென்றனர்.
பின் இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடித்ததில் எதிர்பார்த்த மீன்வரத்து சிக்காமல் மீனவர்கள் வெறும் படகுடன் நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். இதனால் தொழிலில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்து வேலை இன்றி வீடுகளில் முடங்கி கிடக்க நேரிடும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.