sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5வது நாளாக போராட்டம் 1,500 ஆசிரியர்கள் கைது

/

5வது நாளாக போராட்டம் 1,500 ஆசிரியர்கள் கைது

5வது நாளாக போராட்டம் 1,500 ஆசிரியர்கள் கைது

5வது நாளாக போராட்டம் 1,500 ஆசிரியர்கள் கைது


ADDED : பிப் 23, 2024 11:27 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் கோரி, ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாய்; அதற்கு முன் சேர்ந்தோருக்கு, 8,370 ரூபாய் அடிப்படை சம்பளம் தரப்படுகிறது.

இதனால், 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், ஐந்தாவது நாளாக நேற்று, சென்னையில், பள்ளி கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 800 பெண்கள் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறுகையில், ''எங்களின் ஒற்றை கோரிக்கையை நிறைவேறும்வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us
      Arattai