''பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்'': எதை சொல்கிறார் அண்ணாமலை?
''பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்'': எதை சொல்கிறார் அண்ணாமலை?
ADDED : ஜூலை 11, 2024 12:10 PM

சென்னை: ''தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன். ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன். ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என நான் கூறியது உண்மை தான். அவர் மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன்.
செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மை என காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் அழைத்து கூறுகின்றனர். புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர். அதனால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.