sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

7,212 வீடுகள் டிசம்பரில் ஒப்படைப்பு

/

7,212 வீடுகள் டிசம்பரில் ஒப்படைப்பு

7,212 வீடுகள் டிசம்பரில் ஒப்படைப்பு

7,212 வீடுகள் டிசம்பரில் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 02, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, சென்னை மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன.

இவற்றின் தரத்தை கண்டறிய வல்லுனர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ், பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் குறித்து, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அன்பரசன் நேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குநர் ஸ்ரேயா பி சிங், வீட்டுவசதி துறை இணை செயலர் சரயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:

சென்னை, திருநெல்வேலி, கரூர், மதுரை மாவட்டங்களில், 1,223 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகளை முடித்து, இம்மாதம் முதல் டிசம்பர் மாத இறுதிக்குள், அனைத்து குடியிருப்புகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us