sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு: கவர்னர் ரவி கருத்து

/

அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு: கவர்னர் ரவி கருத்து

அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு: கவர்னர் ரவி கருத்து

அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு: கவர்னர் ரவி கருத்து


ADDED : ஜூன் 22, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது,” என கவர்னர் ரவி தெரிவித்தார்.

மதுரையில், முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அருட்காட்சிக்கு கவர்னர் ரவி நேற்று சென்று, அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டார். ஹிந்து முன்னணி சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின், அவர் கூறியதாவது:

கடவுள் முருக பெருமான், தமிழ் மக்களின் அடையாளம். உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் கடவுளான சிவனை, 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்கும் இறைவா போற்றி' என அழைக்கிறோம். சிவனின் குழந்தை முருகன்.

முருகனின் அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஏற்பாடு செய்தோருக்கு நன்றி. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.

நம் கலாசாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஹிமாலய யாத்திரை பக்தர்கள், உத்தராகண்டில் ஒரே இடத்தில், நான்கு புனித தலங்களை தரிசிக்க முடியும்.

இதுபோல, அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும், முருக பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us