sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

/

போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா: அண்ணாமலை கேள்வி

9


ADDED : மார் 19, 2025 10:17 PM

Google News

ADDED : மார் 19, 2025 10:17 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த ஜான் என்ற ரவுடி, கொலை வழக்கில் ஜாமினில் வந்துள்ளார். இவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவியுடன் சென்ற போது, காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இன்று( மார்ச் 19), ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, போலீசாருக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க முதல்வருக்கு அசிங்கமாக இல்லையா. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us