sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்

/

இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்

இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்

இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்


ADDED : ஜன 10, 2024 11:33 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:ஆலயத்தில் மாதா சிலைக்கு, அண்ணாமலை மாலை அணிவிக்க முயன்றபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும், கிராமத்து இளைஞர்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அண்ணாமலை மீது அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். அதில், பி.பள்ளிப்பட்டி லுார்துபுரத்தில், புனித லுார்து அன்னை தேவாலயத்தில் உள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிக்க, அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் சென்றார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அண்ணாமலை விளக்கம் கொடுத்தார். பின், மாதா சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கிச் சென்றார்.

இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் போலீசில் புகார் அளித்தார்.

அதில், 'அன்னை ஆலயத்துக்கு அண்ணாமலை வந்தபோது, மாதா சிலைக்கு மாலை போட உள்ளூர் இளைஞர்கள் சிலர் அனுமதிக்கவில்லை. இதனால் அண்ணாமலைக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

'அப்போது அண்ணாமலை, 'இந்த கோவில் உங்கள் பெயரில் இருக்கா? எதை வைத்து நீங்கள் தடுக்கிறீர்கள். அதற்கான உரிமை இருக்கா?' என கேட்டார். 'இங்கு வந்து, 10,000 பேருடன் தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள்?' என கேட்டு இளைஞர்களை மிரட்டினார்' என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரத்தை ஏற்படுத்துவது, பொது அமைதியை குலைப்பது, பொது அமைதிக்கு எதிராக பேசுவது என, மூன்று பிரிவுகளில், அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யார் இந்த கார்த்திக்?


பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஓன்றிய, தி.மு.க., செயலர் சரவணனின் நெருங்கிய உறவினரும், அவர் நடத்தி வரும் டிரைவிங் ஸ்கூலில் பணிபுரிந்து வருபவருமான கார்த்திக், தி.மு.க., இளைஞர் அணியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. கிறிஸ்தவர் இளைஞர் பேரவையிலும் பொறுப்பில் இருக்கும் கார்த்திக், தி.மு.க., மாணவர் அணி பொறுப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.,வையும், தமிழக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது போலீசில் புகார் அளிப்பதன் வாயிலாக, தனக்கு மாணவர் அணி பொறுப்பு எளிதாக கிடைக்கும் என நினைத்தே அண்ணாமலை மீது புகார் அளித்திருப்பதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.








      Dinamalar
      Follow us