ADDED : ஜன 16, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து நேற்று 90 விசைப்படகில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர்.
அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மீனவர்களை விரட்டினர். பாம்பனைச் சேர்ந்த சுப்ரியான், அன்றன் ஆகியோரது விசைப்படகில் இருந்த 18 மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதும், அவர்களை கைது செய்து இரு படகுகளுடன் இலங்கை பேசாலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.இன்று (ஜன.17 ) பேசாலை மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்ததும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க உள்ளனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

