sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

/

அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி


ADDED : மே 20, 2025 11:10 AM

Google News

ADDED : மே 20, 2025 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, அதிகாலையில் கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் ஹேமி மித்ரா (15), மெளனா ஷெரின் (11). நவரசம் பள்ளியில் 10மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு கேரளாவில் இருந்து காரில் அரச்சலூர் திரும்பியுள்ளனர். அப்போது காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த புளியமரத்தில் மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமிமித்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 வயது சிறுமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.






      Dinamalar
      Follow us