sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளௐரை சுற்றி வளைத்து சி.பி.ஐ., விசாரணை

/

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளௐரை சுற்றி வளைத்து சி.பி.ஐ., விசாரணை

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளௐரை சுற்றி வளைத்து சி.பி.ஐ., விசாரணை

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளௐரை சுற்றி வளைத்து சி.பி.ஐ., விசாரணை

2


ADDED : மார் 23, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 23, 2025 06:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 5 பொறியாளர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளில் கமிஷன் பெறப்படுவதாக புகார் நிலவியது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் நேற்று காரைக்கால் மாவட்டத்தில் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

மதியம் காரைக்கால் கடற்கரையில் உள்ள சீகல்ஸ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். மாலையில் அவரை சந்திக்க கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன், உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் ஓட்டலுக்கு சென்றனர்.

அங்கு காத்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஓட்டலில் கூடியிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகளில் மற்றொரு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஆவணங்களின் பேரில், பிடிபட்ட 5 அதிகாரிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us